சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘காப்பான்’ பட டிரைலரில் “போராட்டம் நடத்துறது தப்புனா, போராடும் சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்” என்று சூர்யா வசனம் பேசியிருக்கிறார்.
இந்த வசனம், நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பதாக இருப்பதாக, கூறி வருகின்றனர். காரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” என்று கூறியிருந்தார்.
ஆக, போராட்டம் வேண்டாம் என்று கருத்து கூறிய ரஜினிகாந்தை விமர்சிக்கும் விதத்தில் தான், ‘காப்பான்’ படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...