சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘காப்பான்’ பட டிரைலரில் “போராட்டம் நடத்துறது தப்புனா, போராடும் சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்” என்று சூர்யா வசனம் பேசியிருக்கிறார்.
இந்த வசனம், நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பதாக இருப்பதாக, கூறி வருகின்றனர். காரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” என்று கூறியிருந்தார்.
ஆக, போராட்டம் வேண்டாம் என்று கருத்து கூறிய ரஜினிகாந்தை விமர்சிக்கும் விதத்தில் தான், ‘காப்பான்’ படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...