தமிழ் மட்டும் இன்றி பிற மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பால், இந்தியில் ஒரு படம், மலையாளத்தில் இரண்டு படம் என்று கை நிறைய படங்களை வைத்திருக்கிறார்.
தமிழை பொருத்தவரை அமலா பால் நடிப்பில் அடுத்ததாக ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’ ஆகிய இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது ‘கடவர்’ என்ற படத்தை அவர் தயாரித்து அதில் நடிக்கவும் செய்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்றால் உடனே கேட்பதற்கு அப்பாய்மெண்ட் கொடுக்கும் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ பஸ்ட் லுக் போஸ்டரே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் உள்ள அப்படக் குழுவினர், சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக, சென்சார் குழுவினரிடம் பெரிய போராட்டத்தையே நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படத்திற்கு நிச்சயம் ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்றாலும், படத்திற்கு முக்கியமான காட்சிகளில் கை வைக்காமல் ஏ கொடுத்தால் போதும், என்ற மனநிலையில் படக்குழுவினர் இருக்கிறார்களாம்.
ஏ சான்றிதழ் பெற்றாலும், படத்தில் சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...