”இயக்குநர் கீராவிடம் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன்” - ‘பற’ பட விழாவில் சமுத்திரக்கனி பேச்சு
Tuesday April-16 2019

தரமான படங்களிலும், அழுத்தமான கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனில், நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘பற’. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால், ராமச்சந்திரன் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். 

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜான், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசுகையில், “இந்த படத்தில் நான் நடிக்க காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை எனக்கு அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கதாபாத்திரம் என்று சொன்னார். அதைத்தானே நான் செய்துக் கொண்டிருக்கிறேன், என்றேன். இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தை பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்த படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டர். இந்தப் படம் அற்புதமான படம், அருமையான பதிவு.” என்றார்.

 

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “இந்த கூட்டத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். இந்த ‘பற’ படத்தில் ஆக்ட் பற்றி டிரைலரில் சொல்லி இருக்கிறார். அது இன்றைய சமகாலப் பிரச்சினை. சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெற வேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக் கூடாது.” என்றார்.

 

Para

 

தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது, “இந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.” என்றார்

 

படத்தின் ஒரு நாயகனான நித்திஷ் வீரா பேசியதாவது, “இந்தப்படத்தைத் தொடங்கியது இயக்குநர் பா. ரஞ்சித் அண்ணன் தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக இருக்கும். இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது நடந்துள்ளது.” என்றார்.

 

இயக்குநர் கீரா பேசுகையில், “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோகன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைத்திருக்கிறார். உமா தேவி மற்றும் சினேகன் பாடல்கள் எழுத, சாபு ஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். மகேஷ் கலையை நிர்மாணித்திருக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை சிவசங்கர் கவனிக்க, இணை தயாரிப்பை எஸ்.பி.முகிலன் கவனிக்கிறார்.

Related News

4613

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery