காமெடி நடிகர் பாலாஜிக்கும், அவரது மனைவி நிதயாவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை, போலீஸ் வரை சென்றது. ஒருவருக்கொருவர் மாத்தி மாத்தி புகார் கூறி வந்த நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும், அந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் இணைந்து வாழ தொடங்கியவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, மீண்டும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூற தொடங்கியுள்ளார்கள்.
இதை தொடர்ந்து, பாலஜியிடம் வாழ முடியாது, அவர் ஒரு சைக்கோ, என்று கூறி அவரை விட்டு பிரிந்து வாழும் நித்யா, தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளராக அவர் உள்ளார்.
இந்த நிலையில், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய பெண்கள் கட்சி சார்பில் நித்யா போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் இல்லை, டெல்லியில்.
முதலில் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட தான் நிதயா முடிவு செய்திருந்தாராம். ஆனால், தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கே வந்து தன்னைப் பற்றி அவதூறு பரப்பணும் என்று பாலாஜி திட்டம் போட்டிருந்ததால், அவருக்கு பயந்து நித்யா, டெல்லியில் போட்டியிடுகிறாராம்.

ஆக, விரைவில் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற இருக்கும் நித்யா, டெல்லியில் தங்கி தனது தேர்தல் வேலைகளை கவனிக்க உள்ளார்.
ஏற்கனவே, நடிகர் பாலாஜி, மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...