தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடைபெற உள்ளது. மக்கள் அனைவரையும் வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறது.
இந்த நிலையில், விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த எந்த இடத்தில் இருக்கும் பூத்களில் வாக்களிக்க போகிறார்கள் என்பது தெரியுமா?
இதோ அந்த லிஸ்ட்,
கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன், திரிஷா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள பூத்தில் வாக்களிக்கிறார்கள்.
விஜய் சின்ன நீலாங்கரையிலும், அஜித் திருவான்மியூரிலும் வாக்களிக்கிறார்கள். விஜயகாந்த் காவேரி தெரு, சாலிகிராமத்தில் வாக்களிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் சாமியார் மடம், அசோக் நகரிலும், சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்திலும் வாக்களிக்கிறார்கள்.
சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார், டி.ராஜேந்திர, சிம்பு மற்றும் அவர்களது குடும்பத்தார் தி.நகரில் உள்ள பூத்தில் வாக்களிக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ் அசோக் நகரிலும், பார்த்திபன் கே.கே.நகரிலும் வாக்களிக்கிறார். நடிகர் பாபி சிம்ஹா ராமாபுரத்தில் வாக்களிக்கிறார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...