பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக, நேற்று இரவு தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்துள்ள எஸ்.பி.பி, தனக்கு உடல் நிலை சரியில்லை என்பது வெறும் வதந்தியே என்று கூறியுள்ளார்.
இது குறித்து எஸ்,.பி.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “எனக்கு உடல் நிலை சரியில்லை என்று உலகம் முழுவதிலும் இருந்து போன் வருகிறது. நான் நலமாக இருக்கிறேன். சில சமூக வலைதளங்களில் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இதனால் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு சென்றால் கூட, அதை பெரியதாக்கி உடல் நிலை மோசமாக இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு என் சகோதரி உயிரிழந்து விட்டார். அதற்காகதான் நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன்.
எதற்காக என்னைப்பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தேவையில்லாத வதந்திகளால் பலரும் வருத்தமடைகிறார்கள். இந்த மாதிரி வதந்திகளை பரப்பாதீர்கள். நால் நலமாக இருக்கிறேன்.” என்றார்.
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது...
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது...
After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...