பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக, நேற்று இரவு தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்துள்ள எஸ்.பி.பி, தனக்கு உடல் நிலை சரியில்லை என்பது வெறும் வதந்தியே என்று கூறியுள்ளார்.
இது குறித்து எஸ்,.பி.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “எனக்கு உடல் நிலை சரியில்லை என்று உலகம் முழுவதிலும் இருந்து போன் வருகிறது. நான் நலமாக இருக்கிறேன். சில சமூக வலைதளங்களில் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இதனால் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு சென்றால் கூட, அதை பெரியதாக்கி உடல் நிலை மோசமாக இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு என் சகோதரி உயிரிழந்து விட்டார். அதற்காகதான் நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன்.
எதற்காக என்னைப்பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தேவையில்லாத வதந்திகளால் பலரும் வருத்தமடைகிறார்கள். இந்த மாதிரி வதந்திகளை பரப்பாதீர்கள். நால் நலமாக இருக்கிறேன்.” என்றார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...