Latest News :

தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் அஜித் படத்திற்கு வந்த புது சிக்கல்!
Thursday April-18 2019

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித், படங்களுக்கு எப்போதுமே பெரிய அளவில் ஓபனிங் இருக்கும். அதிலும், ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியால், அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்திய ‘விஸ்வாசம்’ படத்தின் லாபம் மட்டுமே சுமார் ரூ.15 கோடிக்கு மேல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தை ரூ.45 கோடிக்கு விற்றதாகவும் சொல்கிறார்கள்.

 

’விஸ்வாசம்’ படத்தின் மிகப்பெரிய வசூலால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரத்தை பெரிய அளவில் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்திருக்கிறார். ஆனால், அப்படத்தில் அஜித் குறைவான காட்சிகளில் வருவதால், படத்தை ரூ.35 கோடிக்கு கேட்கிறார்களாம். 

 

Nerkonda Parvai

 

இந்த தொகையை ஏற்க மறுக்கும் போனி கபூர், ‘விஸ்வாசம்’ படத்தை விட அதிகமான தொலைக்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ரூ.50 கோடிக்கு தான் படத்தை கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். 

 

போனி கபூரின் பிடிவாதத்தால் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கும், வியாபாரத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related News

4632

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Tuesday December-23 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery