தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித், படங்களுக்கு எப்போதுமே பெரிய அளவில் ஓபனிங் இருக்கும். அதிலும், ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியால், அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்திய ‘விஸ்வாசம்’ படத்தின் லாபம் மட்டுமே சுமார் ரூ.15 கோடிக்கு மேல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தை ரூ.45 கோடிக்கு விற்றதாகவும் சொல்கிறார்கள்.
’விஸ்வாசம்’ படத்தின் மிகப்பெரிய வசூலால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரத்தை பெரிய அளவில் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்திருக்கிறார். ஆனால், அப்படத்தில் அஜித் குறைவான காட்சிகளில் வருவதால், படத்தை ரூ.35 கோடிக்கு கேட்கிறார்களாம்.

இந்த தொகையை ஏற்க மறுக்கும் போனி கபூர், ‘விஸ்வாசம்’ படத்தை விட அதிகமான தொலைக்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ரூ.50 கோடிக்கு தான் படத்தை கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.
போனி கபூரின் பிடிவாதத்தால் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கும், வியாபாரத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...