Latest News :

”வாக்களிக்கும் கடமையை தவற விடக் கூடாது” - சூர்யா
Thursday April-18 2019

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கருணாஸ், நடிகை மீனா, தயாரிப்பாளர் தனசெயன் உள்ளிட்ட பலர் வாக்களித்தார்கள்.

 

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது தம்பியும் நடிகருமான கார்த்தி மற்றும் குடும்பத்தோடு, சென்னை தி.நகர் வாக்குச் சாவடியில் காலை ஓட்டுப் போட்டார்.

 

ஒட்டு போட்ட சூர்யா, தேர்தல் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Related News

4635

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது
Monday August-18 2025

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

Recent Gallery