தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கருணாஸ், நடிகை மீனா, தயாரிப்பாளர் தனசெயன் உள்ளிட்ட பலர் வாக்களித்தார்கள்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது தம்பியும் நடிகருமான கார்த்தி மற்றும் குடும்பத்தோடு, சென்னை தி.நகர் வாக்குச் சாவடியில் காலை ஓட்டுப் போட்டார்.
ஒட்டு போட்ட சூர்யா, தேர்தல் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...