தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கருணாஸ், நடிகை மீனா, தயாரிப்பாளர் தனசெயன் உள்ளிட்ட பலர் வாக்களித்தார்கள்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது தம்பியும் நடிகருமான கார்த்தி மற்றும் குடும்பத்தோடு, சென்னை தி.நகர் வாக்குச் சாவடியில் காலை ஓட்டுப் போட்டார்.
ஒட்டு போட்ட சூர்யா, தேர்தல் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...