தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய்க்கு அடுத்தப்படியாக குழந்தைகளை கவரும் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். இதனால் தான், இவரது படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைப்பதோடு, டிவியிலும் இவரது படங்கள் ஒளிபரப்பாகும் போது டி.ஆர்.பி உயர்கிறதாம்.
இப்படி முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்பதையும் வலியுறுத்தி நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று வாக்களிக்க சிவகார்த்திகேயன் சென்ற போது, அவரது பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை, என்று அதிகாரிகள் கூறி அதிர்ச்சியளித்திருக்கிறார்கள். பிறகு மீண்டும் மீண்டும் பட்டியலை சரி பார்த்த பிறகு சிவகார்த்திகேயன் பெயர் கண்டுபிடிக்கப்பட்டு அவரை வாக்களிக்க அனுமதித்துள்ளனர்.
இதுபோல, நடிகர் ரோபோ ஷங்கர் பெயரும் வாக்களர்கள் பட்டியலில் இல்லை என்று கூற, அவர் வாக்களிக்காமல் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...