Latest News :

’சர்கார்’ விஜய் பட வழியில் வாக்களித்த வாக்காளர்! - நெல்லையில் நடந்த சுவாரஸ்யம்
Friday April-19 2019

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை விமர்சித்ததோடு, ஒவ்வொருவருக்கும் அவர்களது வாக்கு என்பது எவ்வளவு முக்கியம் என்பது கூறியது.

 

விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்து இப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஆளும் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்தது.

 

அதுமட்டும் இன்றி, ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் ஓட்டை இழந்தவர் வாக்களிக்கலாம், என்ற செய்தியை இப்படம் அழுத்தமாக கூறியது.

 

தற்போது, இந்த நிகழ்வு நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டன் 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

சினிமா பொழுதுபோக்காக இருந்தாலும், அதில் நல்ல விஷயங்களை சொல்வதோடு, அது மக்களிடம் சேரும்படி சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட ‘சர்கார்’ படக்குழுவினரை இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறதாம்.

Related News

4646

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Tuesday December-23 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery