திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர், தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை ‘பாபநாசம்’ பட இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்குகிறார். இதில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா - தம்பியாக நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்தில், கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்திக்கு சத்யராஜ் அப்பாவாக நடித்திருந்தாலும், நடிகை ஜோதிகாவுக்கு அவர் அப்பாவாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...