ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்! - அரசியல் குறித்து ரஜினியின் அதிரடி அறிவிப்பு
Friday April-19 2019

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்காக நேற்று சென்னைக்கு வந்தவர், தனது ஓட்டைப் பதிவு செய்தார்.

 

இதற்கிடையே, இன்று மீண்டும் மும்பை சென்ற ரஜினிகாந்த் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு எப்போது வருவீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.

 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன்.” என்றார்.

 

மேலும், மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? என்று கேட்டதற்கு, இந்த கேள்விக்கு மே 23 ஆம் தேதி பதில் தெரிந்துவிடும், என்றார்.

Related News

4658

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery