Latest News :

நடிகைகளின் பாலியல் புகார்களை விசாரிக்க புது குழு! - தலைவர் யார் தெரியுமா?
Saturday April-20 2019

திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறி வருகிறார்கள். மீ டூ என்ற பெயரில் நடிகைகள் சிலர் கூறிய பாலியல் புகாரில், பல முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பெயரும் அடிபட்டது.

 

இதற்கிடையே, சினிமா துறையில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும், என்று முன்னணி நடிகைகள் பலர் நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

 

இந்த நிலையில், மீ டூ ஒருங்கிணைப்பு குழு ஒன்றை நடிகர் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பூ, ரோஹினி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் உள்ளிட்ட 8 பேர்களை உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளனர்.

 

Nazar

 

நடிகைகள் தங்களுக்கு யார் மூலமாக பாலியல் தொல்லை ஏற்பட்டாலும், இந்த குழுவில் புகார் அளிக்கலாம்.

Related News

4664

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது
Monday August-18 2025

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

Recent Gallery