சினிமாவில் ஹீரோக்கள் மட்டும் இன்றி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களும் கோடி கணக்கில் சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். தற்போதைய தமிழ் சினிமாவில் சாதாரண காமெடி நடிகர்கள் கூட ஒரு நாளைக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள்.
ஆனால், சீரியல்களில் நடிப்பவர்களின் வாழ்க்கை இதற்கு எதிர்மறையாக இருப்பதாக கூறப்படுகிறது. சீரியல் நடிகர்களுக்கு மிகவும் குறைந்த தொலையே சம்பளமாக வழங்கப்படுவதோடு, சினிமாவில் நடிகர்களுக்கு கிடைப்பது போன்ற சலுகைகளும் கிடைப்பதில்லையாம்.
இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ, 150 ரூபாயுடன் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பதற்கு ஸ்ரீ சாதாரணமானவர் அல்ல, அவர் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் ஒருவரின் வாரிசு ஆவார்.
ஆம், பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் தான் ஸ்ரீ. ஆரம்பத்தில் சில தமிழ்த் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஸ்ரீ, தற்போது முழுக்க முழுக்க சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ஸ்ரீ தனித்து வருகிறார்.
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்ரீக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.16 ஆயிரமாம். ஆனால், அவர் நடிக்க வந்த புதிதில் 150 ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்தாராம். தற்போது அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஒரு நாளைக்கு ரூ.16 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...