தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் முகாமிட்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது சொந்த வாழ்க்கை திரைப்படத்திலும் நடித்து வரும் ஸ்ரீரெட்டி, அப்படத்தின் மூலம் பலரது உண்மை முகத்தை வெளியே காட்டப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவை பாராட்டியிருக்கும் ஸ்ரீரெட்டி, ”தான் ஒரு வருடமாக சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
அதாவது, தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்ய, ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழு ஒன்றை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழிவில் நடிகைகள், பெண் இயக்குநர், பேராசிரியை, பெண் மருத்துவர்கள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ஸ்ரீரெட்டி, “தெலுங்கானா அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது. திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை. ஆனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார். வேசி என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...