இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவலாயங்களில் நேற்றி ஈஸ்டர் பண்டிகையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.
கிறிஸ்தவ தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் தங்கியுள்ளார். குண்டு வெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவர் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். இதனால், நூலிழியில் அவர் உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...