Latest News :

இலங்கை குண்டு வெடிப்பு! - நூலிழையில் உயிர் தப்பிய தமிழ் நடிகை
Monday April-22 2019

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவலாயங்களில் நேற்றி ஈஸ்டர் பண்டிகையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.

 

கிறிஸ்தவ தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் தங்கியுள்ளார். குண்டு வெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவர் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். இதனால், நூலிழியில் அவர் உயிர் தப்பியுள்ளார்.

 

Radhika Sarathkumar

 

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

4672

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது
Monday August-18 2025

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

Recent Gallery