ஹீரோ மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு முதல் முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை நடிகர் நிதின் சத்யா, தனது ஷ்வேத் - எ நிதின் சத்யா புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்தில், ‘தெய்வமகள்’ சீரியல் புகழ் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் வைபவ் போலிஸ் அதிகாரியாக நடிக்க, அவரை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். இவர் இயகுநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.
இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்ய, ஆனந்த் மணி கலையை நிர்மாணிக்கிறார். மிராக்கல் மைக்கேல் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் டைடில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு...
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படம் ’கல்கி 2898 AD’...
அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜெபி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’...