கடந்த 18 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது வாக்கை பதிவு செய்தததோடு, வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தனர்.
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா நடிகைகள் சினேகா, மீனா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் வாக்குப் பதிவு செய்தனர். மேலும், ஷங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர்கள் வாக்களர்கள் பட்டியலில் இல்லாததால் அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, நடிகர் சிவகார்த்திகேயனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், அவரை தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை. பிறகு மீண்டும் பட்டியலை சரி பார்த்து அவரது பெயர் இருப்பதாக கூறி அவரை ஓட்டு போட வைத்தனர். ஆனால், சிவகார்த்திகேயனின் பெயர் வாக்களர் பட்டியல் இல்லை என்றும், பெயர் இல்லாமலே அவரை ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப் போட்டிருப்பது உண்மை தான் என்று கூறியவர், அவரை ஓட்டு போட அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்திருக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...