சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பிரபலமாக இருந்த ஜே.கே.ரித்தீஷ், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால மரணமடைந்த சம்பவம் தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு 3டி தொழில்நுட்பத்தில் வெளியான ‘காமசூத்ரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சாய்ராகான். இப்படம் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், நடிகை சாய்ராகான் திடீர் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். அவரது இறப்பு பாலிவுட் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சாய்ராகான் மரணம் குறித்து கூறிய ‘காமசூத்ரா’ இயக்குநர் ரூபேஷ் பால், “சாய்ராவின் மரணம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. காமசூத்ரா படத்தில் அவர் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது எனக்கு வேதனை இருந்தது.
காமசூத்ரா படத்தில் நடிக்க அவர் முதலில் சம்மதிக்கவில்லை. அவரை இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்க கடினமாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதும் கேரக்டரை உணர்ந்து நடித்தார். இந்த படத்தில் அவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...