காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தற்போது காவல் நிலையத்தில் இருப்பது அனைவரும் அறிந்தது தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்த இவர்கள், தற்போது மீண்டும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகிறார்கள்.
தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கூறும் புகாரால், இவர்களது குடும்ப பிரச்சினையை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜி, தனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும், என தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து பாலாஜி கூறுகையில், “என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கிறார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...