விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள புறநகர்ப் பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. விஜயின் 63 வது படமாக உருவாகும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக பூந்தமல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏராளமான ஊழியர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு 100 உயரத்தில் கிரேனில் கட்டிவைக்கப்பட்டிருந்த அதிக திறன் கொண்ட மின்விளக்குகளில் ஒன்று கழன்று கீழே விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்பவரது தலையில் விழுந்தது.
52 வயதாகும் செல்வராஜ் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, செல்வராஜை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜியை நலம் விசாரித்ததோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.
விபத்தில் சிக்கிய தொழிலாளரை விஜய் நேரில் வந்து பார்த்தது, சினிமா தொழிலாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...