நடிகை கஸ்தூரி தனது பேச்சால் பரபரப்பு ஏற்படுத்துவார் அல்லது தன்னை பற்றி மற்றவர்களை பேச வைத்து பரபரப்பு ஏற்படுத்துவார். எப்படிப்பார்த்தாலும், அவரைப் பற்றி அவ்வபோது பரபரப்பான செய்திகள் மட்டும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது.
குட்டை பாவாடை, நிகழ்ச்சிகளில் ஓவராக பேசுவது, மூத்த நடிகையையும், நடிகரையும் இழிவாக பேசியது போன்ற சர்ச்சைகளில் இருந்து விடுபட்ட நடிகை கஸ்தூரி, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இஸ்லாம் பெண்கள் அணியும் பர்தா உடை அணிந்திருப்பதோடு, அந்த உடையை எதற்காக அணிந்திருக்கிறார், என்ற விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.
இதையடுத்து, அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள், கஸ்தூரி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரோ, என்ற குழப்பம் அடைவதோடு, அவரிடமே சில ரசிகர்கள் இது குறித்து கேட்டும் வருகின்றனர்.
இதுவரை இந்த பர்தா விவகாரத்திற்கு பதில் சொல்லாத கஸ்தூரி, விஷயம் பெரிதானவுடனே பதில் சொல்வாரோ என்னவோ.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...