அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பாலிவுட் படத்தில் நடிக்க அஜித் ஓகே சொல்லியிருப்பதோடு, அதற்கு முன்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் அஜித் பிறந்தநாளை படு அமர்க்களமாக கொண்டாடிய ரசிகர்கள், அஜித்திற்காக மேலும் ஒரு ஷ்பெஷலான விஷயத்தை செய்ய இருக்கிறார்கள். இதற்காக அவர்களுடன் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஒருவரும் கைகோர்த்துள்ளார்.
ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும், அவரது ரசிகர்கள் என்னவோ மன்றம் மூலமாகவோ அல்லது அஜித் பெயரிலோ பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் மன்றத்தின் டிபி-யை இயக்குநர் சீனு ராமசாமியை வைத்து வெளியிட உள்ளார்கள்.

இன்று இரவு 7 மணியளவில் இந்த புதிய டிபி-யை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிடுகிறார். அவர் வெளியிட்டதும் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் அந்த டிபி-யை வைரலாக்க ரெடியாகி வருகிறார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...