Latest News :

பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்! - மணிரத்னத்தின் புதிய படம் டிராப்
Tuesday May-07 2019

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர் முதல் பலர் படமாக்க முயற்சி மேற்கொண்டாலும், யாருடைய முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க இயக்குநர் மணிரத்னம் தீவிரமாக உள்ளார். 

 

ஏற்கனவே, இதற்கான முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்ட நிலையில், ”பல கோடி செலவாகும் எதற்கு ரிஸ்க்”, என்று பலர் அவருக்கு அறிவுரை கூறியதால் தனது முயற்சியை கைவிட்டுவிட்டு காதல் படங்களை எடுக்க தொடங்கினார்.

 

தற்போது மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னத்திற்கு லைகா நிறுவனம் கைகொடுத்த நிலையில், நடிகர் நடிகைகளிடம் பேசி தேதியும் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக மணிரத்னம் ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்டதால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம், படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கிவிட்டது. இதனால், ஜியோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் மணிரத்னம் பேசி வருகிறாராம்.

 

மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’யே ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்பதால், இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்க முன்வரவில்லையாம். தற்போது வரை பேச்சுவார்த்தையிலேயே இருப்பதால், அநேகமாக இம்முறையும் மணிரத்னத்தின் முயற்சி தோல்வியில் தான் முடியும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

Related News

4777

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

’குசேலன்’ படத்திற்கு காட்டிய பொறுப்புணர்வை ‘கூலி’ படத்திற்கு காட்டாத ரஜினிகாந்த்!
Wednesday August-13 2025

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...

Recent Gallery