Latest News :

பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்! - மணிரத்னத்தின் புதிய படம் டிராப்
Tuesday May-07 2019

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர் முதல் பலர் படமாக்க முயற்சி மேற்கொண்டாலும், யாருடைய முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க இயக்குநர் மணிரத்னம் தீவிரமாக உள்ளார். 

 

ஏற்கனவே, இதற்கான முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்ட நிலையில், ”பல கோடி செலவாகும் எதற்கு ரிஸ்க்”, என்று பலர் அவருக்கு அறிவுரை கூறியதால் தனது முயற்சியை கைவிட்டுவிட்டு காதல் படங்களை எடுக்க தொடங்கினார்.

 

தற்போது மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னத்திற்கு லைகா நிறுவனம் கைகொடுத்த நிலையில், நடிகர் நடிகைகளிடம் பேசி தேதியும் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக மணிரத்னம் ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்டதால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம், படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கிவிட்டது. இதனால், ஜியோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் மணிரத்னம் பேசி வருகிறாராம்.

 

மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’யே ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்பதால், இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்க முன்வரவில்லையாம். தற்போது வரை பேச்சுவார்த்தையிலேயே இருப்பதால், அநேகமாக இம்முறையும் மணிரத்னத்தின் முயற்சி தோல்வியில் தான் முடியும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

Related News

4777

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery