சினிமாவில் பாலியல் புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரை ஏரியாவிலும் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.
பிரபல மாடலும், டிவி நடிகருமான கரண் ஓபராய், திருமணம் செய்வதாக கூறி பெண் ஒருவரை பாலியல் உறவு கொண்டதாக அப்பெண் அளித்த புகார் மூலம் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
’சாயா’, ‘ஜாசி ஜாசி கோய் நஹின்’, ‘இன்சைட் எட்ஜ்’ போன்ற டிவி தொடர்களில் நடித்து பிரபலமான கரண் ஒபராய் மீது போலீசில் புகார் அளித்த பெண், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிகிறார், என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கரண் ஒபராயை கைது செய்து, அவர் மீது பிரிவு 376 மற்றும் 384 ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...