‘பேட்ட’ வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்கள் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், பாராளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், போட்டியிட தயார் என்று அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், திரைப்படங்களில் நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், ‘தர்பார்’ படம் முடிந்த பிறகு தனுஷுடன் ஒரு படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தனது வுண்டெர்பார் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்த நிலையில், சில படங்களால் அவர் நிறுவனத்திற்கு நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் படம் தயாரிப்பை தனுஷ் நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தனுஷின் நஷ்ட்டத்தை ஈடுகட்டுவதற்காகவே ரஜினிகாந்த், தனுஷி தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுக்கிறாராம். ஏற்கனவே தனுஷின் வுண்டெர்பார் நிறுவனம் ரஜினியின் ‘காலா’ படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...