தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய், தனது சமீபத்திய படங்களில் அரசியல் குறித்து அதிகமாக பேசுவதால், தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் அவரது படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அவரது படங்கள் சர்ச்சைகள் பலவற்றை சந்தித்தாலும், மாபெரும் வெற்றியும் பெற்றுவிடுகிறது.
வெள்ளித்திரையில் மட்டும் விஜய்க்கு இத்தகைய வரவேற்பு கிடையாது. சின்னத்திரையிலும் விஜய் படங்கள் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப். அதனால் தான், விஜய் படங்களை வாங்க பல சேனல்கள் போட்டி போடுகின்றன.
இந்த நிலையில், ஒரு நாளில் ஒரு விஜய் படத்தை தான் சேனல்கல் ஒளிபரப்பும். ஆனால், ஒரு சேனல் ஒரு நாளில் பல விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருக்கிறது.
ஆம், இந்த வாரம் சனிக்கிழமை ஜெயா டிவியில் விஜயின் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ‘கத்தி’, ‘மதுர’ ஆகிய நான்கு படங்கள் ஒளிபரப்பாகிறது. ஜெயா டிவியின் இந்த அதிரடிக்கு காரணம் டி.ஆர்.பி ரேட்டிங் தான். என்னதான் செய்தாலும் உயராத டி.ஆர்.பி ரேட்டிங்கை விஜய் படம் ஒளிபரப்பி உயர்த்திக் கொள்ள சேனல் நிர்வாகம் முடிவு செய்ததாம். அதனால் ஒரே நாளில் இத்தனை விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...