தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய், தனது சமீபத்திய படங்களில் அரசியல் குறித்து அதிகமாக பேசுவதால், தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் அவரது படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அவரது படங்கள் சர்ச்சைகள் பலவற்றை சந்தித்தாலும், மாபெரும் வெற்றியும் பெற்றுவிடுகிறது.
வெள்ளித்திரையில் மட்டும் விஜய்க்கு இத்தகைய வரவேற்பு கிடையாது. சின்னத்திரையிலும் விஜய் படங்கள் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப். அதனால் தான், விஜய் படங்களை வாங்க பல சேனல்கள் போட்டி போடுகின்றன.
இந்த நிலையில், ஒரு நாளில் ஒரு விஜய் படத்தை தான் சேனல்கல் ஒளிபரப்பும். ஆனால், ஒரு சேனல் ஒரு நாளில் பல விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருக்கிறது.
ஆம், இந்த வாரம் சனிக்கிழமை ஜெயா டிவியில் விஜயின் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ‘கத்தி’, ‘மதுர’ ஆகிய நான்கு படங்கள் ஒளிபரப்பாகிறது. ஜெயா டிவியின் இந்த அதிரடிக்கு காரணம் டி.ஆர்.பி ரேட்டிங் தான். என்னதான் செய்தாலும் உயராத டி.ஆர்.பி ரேட்டிங்கை விஜய் படம் ஒளிபரப்பி உயர்த்திக் கொள்ள சேனல் நிர்வாகம் முடிவு செய்ததாம். அதனால் ஒரே நாளில் இத்தனை விஜய் படங்களை ஒளிபரப்பி அதிரடி காட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...