நடிகர் விஷால் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தமிழக அரசு சார்பில் தனி அதிகாரியாக என்.சேகர் என்பவர் நியமிக்கப்பட்டதோடு, இனி தயாரிப்பாளர் சங்கம் குறித்த அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பர் என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து, தனி அதிகாரி நியமத்திற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி என்.சேகர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு என 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறார். அதில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தனி அதிகாரி சேகரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன், இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்த்தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக வழக்கு உள்ளபோது தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரம் இல்லை, என்று அந்த தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...
ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘குசேலன்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது...