நடிகர் விஷால் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தமிழக அரசு சார்பில் தனி அதிகாரியாக என்.சேகர் என்பவர் நியமிக்கப்பட்டதோடு, இனி தயாரிப்பாளர் சங்கம் குறித்த அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பர் என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து, தனி அதிகாரி நியமத்திற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி என்.சேகர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு என 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறார். அதில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தனி அதிகாரி சேகரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன், இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்த்தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக வழக்கு உள்ளபோது தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரம் இல்லை, என்று அந்த தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...