Latest News :

ஜாதி விவகாரம் - இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் இடையே மோதல்!
Friday September-08 2017

சென்னையில் இன்று நடைபெற்ற மாணவி அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில், ஜாதி தொடர்பான விஷயத்தில் இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களது கண்டத்தை பதிவு செய்து வருவதோடு ஆங்காங்கே போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

 

இன்று சென்னை வடபழனியில் உதவி இயக்குநர்கள் சார்பில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் அமீர் மற்றும் பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

 

முதலில் பேசிய இயக்குநர் அமீர், “நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காக் கூடியிருக்கிறோம். ஜாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் தமிழனாகச் சமத்துவம் அடைந்துள்ளோம்” என்றார்.

 

அமீரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், “இன்னும் எத்தனை நாள் சமூக நீதியற்ற சமூகமாக இருக்கப் போகிறோம்? தமிழனாக இருந்து நால் சொல்கிறேன் - தமிழ்த் தேசியம் எட்டாக்கனிதான். ஜாதியாகப் பிரிந்திருக்கும் வரை உன்னால் தமிழ்த் தேசியத்தைத் தொடமுடியாது.

 

தமிழ், தமிழன் என்று இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு தெருவிலும் ஜாதி உள்ளது. தமிழன் ஜாதியால் பிரிந்துள்ளான். ஒப்புக்கொள்ளுங்கள். அனிதாவின் மரணத்திலாவது நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என்று ஆவேசமாக பேசியதால், அரங்கத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.


Related News

482

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

Recent Gallery