நடிகர்களும், இயக்குநர்களும் பல முறை என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்! - பிரபல நடிகை புகார்
Friday May-10 2019

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பல நடிகைகள் கூறி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டை’, ‘வெடி’, ‘நடுநிசி நாய்கள்’ என பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் சமீரா ரெட்டி, தன்னை இயக்குநர்களும், நடிகர்களும் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள் என்று பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

 

பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்ததோடு, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். மேலும், ஒரு குழந்தையை பெற்றெடுத்த அவர் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

 

இந்த நிலையில், சமீபத்திய பேட்டில் ஒன்றில், “சினிமாவில் எப்போதும் பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவுகிறது. நான் சினிமாவில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பதை அறிய ஒருவர் கூட விரும்பவில்லை. அப்போது தான் தெரிந்தது அனைவரும் ஒரே மாதிரிதான் என்று.

 

Sameera Reddy

 

என்னை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தது அதிர்ச்சியளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

4821

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery