சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பல நடிகைகள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டை’, ‘வெடி’, ‘நடுநிசி நாய்கள்’ என பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் சமீரா ரெட்டி, தன்னை இயக்குநர்களும், நடிகர்களும் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள் என்று பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்ததோடு, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். மேலும், ஒரு குழந்தையை பெற்றெடுத்த அவர் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டில் ஒன்றில், “சினிமாவில் எப்போதும் பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவுகிறது. நான் சினிமாவில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பதை அறிய ஒருவர் கூட விரும்பவில்லை. அப்போது தான் தெரிந்தது அனைவரும் ஒரே மாதிரிதான் என்று.

என்னை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பல முறை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தது அதிர்ச்சியளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...