தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் பா.ரஞ்சித், பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படம் முடிந்ததும் தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ள ரஞ்சித் அதற்கான கதையையும் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தை தயாரிக்கும் ரஞ்சித், மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் கலையரசன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில், கலையரசன் ஹீரோவாக நடிக்கும் படத்துடன் மற்றொரு படத்தையும் பா.ரஞ்சித் தயாரிப்பதாகவும், அதில் ஹீரோவாக விஜயின் ‘மெர்சல்’ படத்தில் வில்லனாக கலக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...