’காற்று வெளியிடை’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மணிரத்னம் தனது அடுத்த படத்தை பிரம்மாண்ட படமாக இயக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, துல்கர் சல்மான் ஆகியோருடன் நான்காவதாக ஒரு முக்கிய ஹீரோ நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் ஜோதிகா நடிக்கிறார். இதனை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தான் இயக்கும் படங்களை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் சொந்தமாக தயாரிக்கும் இப்படத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக தயாரிக்க உள்ளார். அந்த மற்றொரு நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் என்று கூறப்படுகிறது.
தற்போது நான்காவது ஹீரோ தேர்வில் ஈடுபட்டுள்ள மணிரத்னம், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...