’காற்று வெளியிடை’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மணிரத்னம் தனது அடுத்த படத்தை பிரம்மாண்ட படமாக இயக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, துல்கர் சல்மான் ஆகியோருடன் நான்காவதாக ஒரு முக்கிய ஹீரோ நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் ஜோதிகா நடிக்கிறார். இதனை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தான் இயக்கும் படங்களை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் சொந்தமாக தயாரிக்கும் இப்படத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக தயாரிக்க உள்ளார். அந்த மற்றொரு நிறுவனம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் என்று கூறப்படுகிறது.
தற்போது நான்காவது ஹீரோ தேர்வில் ஈடுபட்டுள்ள மணிரத்னம், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...