தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் நாசர், செயலாளராக இருக்கும் விஷால் மற்றும் பொருளாளராக இருக்கும் கார்த்தி ஆகியோரது பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
நாளை சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க உள்ளனர். அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்காக தேதி மற்றும் இடத்தை தேர்தல் அதிகாரி அறிவிப்பார். மேலும், ஓட்டு போட தகுதி உடையவர்களின் பட்டியலும் வெளியிடப்படும்.
நாசர் தலைமையிலான அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் செயலாளர் மற்றும் கார்த்தி பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், விஷாலுக்கு எதிராக ராதிகா தலைமையில் புதிய கூட்டணி களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. ராதிகாவின் கூட்டணியில் சிம்பு, எஸ்.வி.சேகர், உதயா ஆகியோரும் முக்கிய பொருப்புகளுக்கு போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...