‘மைனா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விதார்த், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், அவரது பல படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் வாய்ப்புகள் குறைந்ததால் சொந்தமாக அவரே படம் தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
அதன்படி, விதார்த் தயாரித்த முதல் படம் தான் ‘குற்றமே தண்டனை’. ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கிய இப்படம் மிக குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படமாகவும், பத்திரிகைகள் பாராட்டும் படமாக இருந்தாலும், வியாபார ரீதீயாக இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், விதார்த்துக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டது. இதனால் கடன் காரராண விதார்த், தன்னிடம் இருந்த சில சொத்துக்களை விற்று கடனை அடைத்து வந்தார்.
இந்த நிலையில், தன்னிடம் இருந்த காரை கூட விற்று கடனை அடைத்திருக்கும் விதார்த், இப்போது தான் புது கார் ஒன்றை வாங்க இருக்கிறாராம்.
விதார்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘குரங்கு பொம்மை’ ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம், நேற்று பல புதிய படங்கள் வெளியாவதால், நல்லா ஓடிக்கொண்டிருந்த விதார்த்தின் ‘குரங்கு பொம்மை’ படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கியிருப்பது ‘குரங்கு பொம்மை’ படக்குழுவினரை பெரும் கவலை அடையச் செய்துள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...