முன்னணி தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த சொர்ணமால்யா, மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் திடீரென்று சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார்.
இந்த நிலையில், தான் படங்களில் நடிக்காதது எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இல்லை, எனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நானே தான் வேண்டாம் என்று நிராகரித்தேன், என்று சொர்ணமால்யா கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய சொர்ணமால்யா, “சினிமாவில் நடிகையாக ஜெயிக்க வேண்டும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. டிவியில் பிரபலமானாலும் எனக்கு என்று நிறைய கமிட்மெண்ட் இருந்தது. பரதநாட்டியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். பி.எச்.டி பட்டம் பெற்றேன். அதை தொடர்ந்து எனக்கு எதை செய்ய விருப்பமோ அதை செய்துக் கொண்டு பயணித்தேன்.
நான் தொடர்ந்து படங்கள் நடிக்காமல் போனது எனது தோல்வியல்ல, நானாகத்தான் பல படங்களை நிரகாரித்தேன். இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாரதிராஜா, லிங்குசாமி, வசந்த் என பல முன்னணி இயக்குநர்கள் என்னை நடிக்க அழைத்தும் நான் முடியாது என்று கூறிவிட்டேன். இப்போதும் கே.எஸ்.ரவிகுமார் என்னை பார்த்தால், அதிகமான படங்களை நிராகரித்த நடிகை என்றால் அது சொர்ணமால்யாவாக தான் இருக்கும் என்று கூறுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...