விஜயின் ‘திருப்பாச்சி’ மூலம் இயக்குநராக அறிமுகமான பேரரசு, தொடர்ந்து ’சிவகாசி’, ‘திருப்பதி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இவரது படங்கள் அனைத்தும் ஊர் பெயர்களாகவே இருப்பது இவரது தனி சிறப்பாகும்.
படம் இயக்குவதோடு, பாடல் எழுதுவது நடிப்பது என்று பன்முக திறன் கொண்ட பேரரசு, கடந்த 2015 ஆம் ஆண்டு ‘சாம்ராஜ்யம் 2’ என்ற மலையாளப் படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்காமல் இருப்பவர், வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான சிகரம் டாக்டர்.ஆர்.சந்திரசேகர், ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, மோகன் ராஜா, பொன்ராம் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “இங்கு நாங்கள் ஒரு கோவில் பூசாரியாக தான் இருக்கிறோம். கடவுள் ஆர்.சந்திரசேகர் தான். எப்படி கோவிலில் கடவுளின் பெயரை சொல்லி பூசாரிகள் விபூதி கொடுப்பார்களோ, அதுபோல் சந்திரசேகர் சாரின் பணத்தை நாங்கள், பூசாரிகளாக இங்கு மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்த பாராட்டு, வாழ்த்து அனைத்தும் அவருக்கு தான் போய் சேர வேண்டும்.” என்று பேசினார்.

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...