Latest News :

ஈழ பின்னணியில் உருவாகி ’யு’ சான்றிதழ் பெற்ற ‘சினம்கொள்’
Saturday May-18 2019

படம் எடுப்பது ஈஸியாக இருந்தாலும், எடுத்த படத்தை முழுமையாக தியேட்டருக்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. அதில் முதலாவது சென்சார் குழுமம். நாம் என்னதான் கற்பனை செய்து காட்சிகளை வைத்தாலும், தணிக்கை குழுவின் கருத்துக்கு எதிராக அது இருந்தால் வெட்டப்பட்டு விடும். அதிலும், ஈழப் பின்னணி படம் என்றால் சொல்லவே வேண்டாம், சான்றிதழ் கிடைப்பதே குதிரை கொம்பு தான். அப்படி ஒரு நிலையை மாற்றியிருக்கிறது ‘சினம்கொள்’.

 

ஆம், ஈழ பின்னணியில் உருவாகி ‘யு’ சானிறிதழ் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது ‘சினம்கொள்’.

 

தணிக்கை குழுவில் 'யு' சான்று கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜோசஃப், மேலும் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார்.

 

கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் தனது ‘சினம்கொள்’ படம் பற்றி கூறுகையில், “இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் முற்றிலும் படம்பிடிக்க நாங்கள் முடிவு செய்தோம். அப்போது தான் ரசிகர்கள் அந்த தளத்திற்கு நெருக்கமாக அனுபவத்தை உணர முடியும் என நினைத்தோம்" எனக்கூறும் இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொள்கிறார். 78 பேர் கொண்ட மொத்த படக்குழுவும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு பயணித்திருந்தது. உண்மையில், சில தொழில்நுட்ப கலைஞர்கள் சிங்களர்களாக இருந்தனர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். இத்தகைய விஷயங்கள் இந்த படத்திற்கு ஒரு உண்மையான வரம்.

 

போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஒரு நபர் (ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன்), அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த சினம் கொள் திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருக்கிறது.” என்றார்.

 

தமிழகம், ஐரோப்பா, கனடா ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்களின் நிதி மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Related News

4887

‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video!
Sunday November-23 2025

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery