கடந்த தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவி தலைமையிலான அணியை விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. அதையடுத்து பல்வேறு நிகழ்ச்சியை நடத்தி நடிகர்கள் சங்க கட்டிடத்தை கட்டி வருகிறது. மேலும், இதனை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்த விஷால் அணியினர், தற்போது தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள தற்போதைய தலைவர் நாசர், மீண்டும் தங்களது அணி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அதே சமயம், இந்த முறை விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணிக்கு எதிராக நடிகை ராதிகா தலைமையில் சிம்பு, உதயா உள்ளிட்டவர்கள் அடங்கிய அணி களம் இறங்கப் போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர்கள் சங்க தேர்தலில் புதிய திருப்பமாக விஷால் அணியில் ராதிகா இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, விஷால், சரத்குமார் மற்றும் ராதிகாவை ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசியிருக்கிறாராம். இந்த சந்திப்பு எதற்காக என்பது தெரியாத நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து பேசியிருப்பார்களோ, என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், இதை மறுத்திருக்கும் ராதிகா, ”இது எப்போது நடந்தது?” என்று ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...