இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமா தான் என்ற நிலையை தற்போது தென்னிந்திய சினிமாக்கள் மாற்றியுள்ளது. பாலிவுட் சினிமாக்களுக்கு நிகரான பிரம்மாண்டமாக மட்டும் இன்றி, நல்ல கதையம்சம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல படங்கள் தொடர்ந்து வெளியாவதும் ஒரு காரணம்.
இதற்கிடையே, தென்னிந்திய திரைப்படங்களை கவனமாக பார்த்து வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலர், அப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வதிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்டில் கூட, ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படத்தை அக்ஷய் குமார் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் டாப் வசூல் ஹீரோக்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரூ.500 கோடியை வசூல் செய்த முதல் தென்னிந்திய ஹீரோ, ரூ.250 கோடியை அதிகம் முறை வசூலித்த ஹீரோ என்ற தலைப்பில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ‘பாகுபலி’ படம் மூலம் ரூ.500 கோடி வசூலை தாண்டிய ஓரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பிரபாஸ் பெறுகிறார். வேறு எந்த தென்னிந்திய நடிகர்களின் படமும் ரூ.500 கோடியை வசூலிக்கவில்லை.

அதே போல் ரூ.250 கோடி வசூலை தொடர்ந்து இரண்டு முறை கடந்த ஒரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றிருக்கிறார். ரஜினியின் ‘2.0’ படம் இந்த அளவுக்கு வசூலித்திருந்தாலும், ரஜினியின் அதற்கு முந்தைய படமான ‘காலா’ ரூ.160 கோடி மட்டுமே வசூலித்ததால், ரஜினிக்கு கூட இந்த பெருமை கிடைக்கவில்லை.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...