90 களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இந்த நடிகை தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்ததோடு, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஹீரோயினான பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தற்போதைய மாஸ் ஹீரோவான அஜித்துடனும் ஜோடி போட்டவர்.
சீனியர் நடிகர்கள், இளம் நடிகர்கள் என அனைவருடனும் ஜோடி போட்ட இவரைப் பற்றி தற்போது அந்தரங்க சீக்ரெட் ஒன்று வெளியாக பரவி வருகிறது.
அதாவது நடிகை பீக்கில் இருந்த போது அவரது தேதி மற்றும் மற்ற விஷயங்களையும் அவரது அம்மா தான் கவனித்து வந்தாராம். அப்போது கேரளாவில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நடிகையை கமிட் செய்வதற்காக அவரது அம்மாவிடம் சம்மந்தப்பட்ட பி.ஆர்.ஓ பேசிய போது, கடை திறப்பு 2 லட்சம், ஸ்பெஷல் பார்ட்டியில் பங்கேற்பதற்கு 3 லட்சம் ரூபாய், என்று அம்மா தரப்பு கூறியதாம். கேரளா பார்ட்டியும் உடனே ஓகே சொல்ல, அம்மணியும் கேரளாவுக்கு பறந்தாராம்.
கேரளாவுக்கு போனவர் திறந்த கடை சிறு ரக கடையாம். இவர் அங்கு வரப்போகிறார் என்ற விஷயம் யாருக்கும் தெரியவில்லையாம். அதிலும், அந்த கடைக்காரர் கடை திறப்பு நிகழ்ச்சியை அவசரமாக முடித்துக்கொண்டு ஓட்டலுக்கு போவதிலேயே அவசரம் காட்டினாராம். ஒரு வழியாக கடை திறப்பு நிகழ்வு முடிந்ததும் நடிகை ஓட்டலுக்கு போனால், அந்த கடை முதலாளி ரொம்ப வயதானவராக இருந்தாராம். டென்ஷனான நடிகை அவருடன் மீட்டிங் நடத்த முடியாது என்று கூறியதோடு, தொந்தரவு செய்தால் போலீஸுக்கு போவேன், என்றும் கூறிவிட்டாராம்.
மறுபக்கம் கடைக்காரர் ஆவலோடு காத்திருக்க, நடிகையின் எண்ணத்தை அவரிடம் சொன்னதும் டென்ஷனாகிவிட்டாராம். பிறகு நடிகையிடம் பேசி ஒரு வழியாக, தோல் கலரில் மெல்லிய உடையை அணிந்துக்கொண்டு கடை முதலாளி முன்பு நிற்பேன், பார்த்துக்கொள்ளட்டும் ஆனால் தொட கூடாது, என்று நடிகை கூற, கடை முதலாளியும் நடிகையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாராம்.
பிறகு நடிகை அந்த உடையை அணிந்துக்கொண்டு கடை முதலாளி முன்பு ஐந்து நிமிடம் நடந்தாராம். அதையே பார்த்து திருப்தியான கடை முதலாளி பேசியபடி 3 லட்சம் ரூபாயை நடிகைக்கு கொடுத்தாராம்.
பார்த்ததற்கே 3 லட்சம் ரூபாய் வாங்கிய நடிகையின் இந்த அந்தரங்க சீக்ரெட் குறித்து கேள்விப்பட்ட கோலிவுட்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த நடிகையின் பெயர் இரண்டெழுத்தில் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...