சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தீபா வெங்கட். ’ரோஜா’, ‘சித்தி’, ‘கோலங்கள்’, ‘அண்ணாமலை’ என பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பு மட்டும் இன்றி பின்னணி குரல் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வரும் தீபா வெங்கட், நயன்தாராவுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மேலும், ஹலோ எப்.எம்-மில் நட்சத்திர தொகுப்பாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்த தீபா, ‘மூன்றாம் பார்வை’ என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவும், தீபாவுக்காகவும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனது சொந்த காரணங்களால் ‘மூன்றாம் பார்வை’ நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக தீபா வெங்கட் அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவால், அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...