‘பேட்ட’ வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இளம் இயக்குநர்கள் பலரிடம் கதை கேட்டு வருகிறார். இதற்கிடையே, கே.எஸ்.ரவிக்குமாரிடம் கரு ஒன்றை கூறிய ரஜினிகாந்த், அதற்கு திரைக்கதை அமைக்குமாறும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய சிவாவிடம் ரஜினிகாந்த் கதை கேட்டதாக கூறப்படுகிறது.
அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்கள் பணியாற்றிய சிவா, நான்காவது படமான ’விஸ்வாசம்’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார்.

இந்த நிலையில், இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிவா, அவரிடம் கதை ஒன்றை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இயக்குநர் சிவா - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...