விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்தில் இளையராஜா இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் பாடுகிறார்.
பாடல்கள் ராயல்டி விவகாரத்தில் இளையராஜா, எஸ்.பி.பி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இனி இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லை என்று எஸ்.பி.பி அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஜூன் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடப்போகிறார். இதையடுத்து இளையராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் இடையே இருந்த பிரச்சினை தீர்ந்து சமாதானம் அடைந்தார்கள்.
இந்த நிலையில், மேடை நிகழ்ச்சிக்கு முன்பாகவே இளையராஜாவையும், எஸ்.பி.பி யை ‘தமிழரசன்’ படம் ஒன்றாக்கியுள்ளது. ஆம், தமிழரசன் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமனியம் ஒரு பாடல் பாடியுள்ளார். இப்படால் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் கோபி, ராதாரவி சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படதின் பாடல்களை பழனிபாரதி மற்றும் ஜெய்ராம் எழுதுகிறார்கள். நிலன் கலையை நிர்மாணிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அனல் அரசு அமைக்க, புவன் அந்திரசேகர் படத்தொகுப்பு செய்கிறார். பிருந்தா, சதீஷ் நடனம் அமைக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...