வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தில் தலைப்பு அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆனாலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கிடையே இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படமே டிராப் ஆகும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இதனை மறுத்த சுரேஷ் காமாட்சி, தனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும், என்று கூறினார்.
மேலும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருந்த நிலையில், திடீரென்று ஜூன் மாதத்திற்கு தள்ளி போனதோடு, ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் சிம்பு நடிக்க சென்றுவிட்டார். தற்போது அவர் மஹா படப்பிடிப்பில் தான் இருக்கிறார்.
இந்த நிலையில், ‘மாநாடு’ படப்பிடிப்பு இம்மாதம் நிச்சயம் தொடங்கும் என்றும், முதலில் சிம்பு, கல்யாணி இடம்பெறும் காதல் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, அக்காட்சியில் மலேசியாவில் படமாக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
இன்னும் சில நாட்களில் ‘மஹா’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, ’மாநாடு’ படக்குழுவினரோடு சிம்பு மலேசியா பறக்க உள்ளாராம்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...