‘பாகுபலி’ படம் மூலம் இந்திய சினிமா அரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்திய பிரபாஸ், பிறந்தநாள் பரிசு ஒன்றின் மூலம் நடிகர் விக்ரம் பிரபுவை குஷிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த பரிசு விக்ரம் பிரபுக்கானதல்ல, அவரது மகன் விராட்டுக்கானது.
பாகுபலி படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் கதை தொகுப்புகள் காமிக்ஸ் வடிவத்திலும், படத்தில் பயன்படுத்தப்பட்ட சில உடைகள் பாகுபலி பெயரோடு வியாபரத்திற்கும் வந்துள்ளது. அதுபோல, பாகுபலி படத்தில் ஹீரோ பிரபாஸ் பயன்படுத்திய வாள், அனுஷ்கா பயன்படுத்திய கத்தி, ராணா பயன்படுத்திய கதை உள்ளிட்டவை குழந்தைகளின் விளையாட்டு பொருட்களாக பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
துபாயைச் சேர்ந்த பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தோடு பாகுபலி குழுவினர் ஒப்பந்தம் போட்டு இப்பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள். ஆன்லைனின் அமோகமாக விற்பனையாகி வரும் இந்த பொருட்கள் தான் தற்போது பொடிசுகளின் பேவரைட் விளையாட்டு சாதனங்களாக உள்ளது.
இந்த நிலையில், பாகுபலி வாள் மீது நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கும் கொள்ளை பிரியமாம். தனது பிறந்தநாள் பரிசாக அப்பா விக்ரம் பிரபுவிடம் பாகுபலி வாளை விராட் கேட்டிருக்கிறார். மகனின் ஆசையை பிரபாஸுக்கு விக்ரம் பிரபு தெரியப்படுத்த, உடனே தனது கையெழுத்து போட்டு, பாகுபலி வாள் ஒன்றை பிரபாஸ் கூரியர் மூலம் விராட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வாளை பார்த்து விராட் எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ, அதைவிடவும் விக்ரம் பிரபு அதிகமாகவே சந்தோஷப்பட்டாராம். காரணம் தனது மகன் ஆசைப்பட்ட பாகுபலி வாளை, அந்த பாகுபலியே பரிசாக கொடுத்ததற்காக.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...