இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்களை பொது மேடைகளில் பாடுவதற்கும், திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும், என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்தனர்.
மேலும், தனது பாடல்களுக்கான காப்புரிமை தொகையை, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு இளையராஜா வழங்கியுள்ளார்.
அதன்படி, இனி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த வேண்டுமானால், இசைக் கலைஞர்கள் சங்கத்தில் கட்டணம் செலுத்திவிட்டு தான் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, “இளையராஜா பாடலுக்கு அனுமதி பெறவும், அதற்கான கட்டணங்களை அறியவும், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம். இதற்கு முன், முதல் நிலையில் உள்ளவர்களுக்கு, இளையராஜா பாடலை பாட, உலக அளவில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கட்டணமாக இருந்தது. அது மிகவும் அதிகம் என்று பலர் கூறியதால், கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் குறித்து அறிய விரும்புகிறவர்கள் சங்கத்தை அணுகினால், உரிய விளக்கம் அளிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...