‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. தற்போது ‘அரண்மனை கிளி’ என்ற சீரியலில் நடித்து வரும் நந்தினி, சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயாவை பிரிந்து நந்தினி வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று கார்த்திகேயா தற்கொலை செய்துக்கொண்டார். மேலும், கார்த்திகேயாவின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்குப் பிறகு அமைதியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நந்தினி, தற்போது சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலிக்க தொடங்கியுள்ளார்.
‘நாயகி’ சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்து வரும் யோகேஷுக்கும், நந்தினிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது...
பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...