தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் முன்னணி ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
தற்போது பாண்டியராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் விரைவில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக தெலுங்குப் படமான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகாவை படக்குழு ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில், ராஷ்மிகா சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ராஷ்மீகா சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்திற்கு தேதிகளை ஒதுக்கியவர், சிவகார்த்திகேயன் படத்திற்கு சரியான தேதிகளை ஒதுக்கி கொடுக்காமல் சொதப்பினாராம். இது குறித்து படக்குழு அவரிடம் கேட்டதற்கு, தனக்கு மகேஷ் பாபு படம் தான் முக்கியம் என்று கூறி, சிவகார்த்திகேயன் படத்தில் இருந்தே விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் முன்னணி நடிகைகள் சிலர் தனக்கு ஜோடியாக நடிக்க மறுப்பு தெரிவிப்பது குறித்து வருத்தப்பட்ட சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்தும், மற்ற ஹீரோவுக்காக தனது படத்தில் இருந்து நடிகை ஒருவர் விலகியதால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளாராம்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...