தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு வரும் ஜுன் 23 ஆம் தேதி சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பொருப்பில் இருக்கும் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையிலான பாண்டவர் அணியும், புதிதாக உதயமாகியிருக்கும் கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோரது தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்காக இரு அணிகளும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் அறிவிப்பும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
தற்போது, அப்பகுதியில் தேர்தல் நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும், என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது, என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், மாற்று இடத்தை பரிந்துரைக்கும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
ஆஹா..., ராதாரவி சொன்னது போல தேர்தல் நடக்காது போலிருக்கே...
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...