Latest News :

பாகுபலி அரண்மனைகளை பார்க்க மக்களுக்கு அனுமதி!
Sunday September-10 2017

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இந்திய சினிமா வரலாற்றில் தனி முத்திரை பதித்த படமாகவும் உள்ளது.

 

சரித்திரக்கால படமாக உருவான இப்படத்தின் பிரம்மாண்டம் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. படத்தில் இடம்பெறும் மகிழ்மதி தேசத்து அரண்மனை, குந்தலநாட்டு அரண்மை மற்றும் போர்க்கருவிகள் உள்ளிட்டவைகளை பல கோடி செலவில் உருவாக்கினார்கள். பாகுபலியின் பிரம்மிக்கத்தக்க இந்த அரண்மனை செட்டுகள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், கலை இயக்குநர் சாபு சிரில் உருவாக்கினார்.

 

தற்போது, பாடகுபலியின் இரண்டு பாகங்களும் வெளியாகி 100 நாட்களை கடந்துவிட்டதால், படத்திற்காக அமைக்கப்பட்ட அரண்மனை செட்டுகள் மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

 

ஐதராபாத்தின் சுற்றுளா தளமாக திகழும் கோல்கொண்டா கோட்டை, சார்மினார், உசைன் சாகர் ஏரி ஆகியவற்றுடன் தற்போது பாகுபலி அரண்மனைகளும் இணைந்துள்ளன. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் பாகுபலியின் அரண்மனை செட்டை பார்க்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.

Related News

511

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery